Sunday, November 2, 2008

கல்வாரி அன்பை Kalvaari Anbai




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே....
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே..... [2]

கெத்சாமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை....[2]
எத்திசை அன்புதொனிக்கின்றதே....
எந்தன் மனம் திகைக்கின்றதே...
கண்கள் கலங்கிடுதே....
கண்கள் கலங்கிடுதே...-(கல்வாரி)

சிலுவையில் மாட்டி வதைத்தனரோ -உம்மை
சென்னிற மாக்கினரோ..... [2]
அப்போதும் அவர்க்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் அன்பு பெரிதே......
அப்பா உம் அன்பு பெரிதே....- (கல்வாரி)

என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே
உன் ஜீவன் தந்தீரன்றோ... [2]
என் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்.
தந்து விட்டேன் அன்பு கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்.......
ஏற்று என்றும் நடத்தும்......-(கல்வாரி......)

No comments: