Saturday, October 15, 2016

Nambi Vanthen Mesiya – நம்பி வந்தேன் மேசியா



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே – நான்

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான்

Thursday, March 11, 2010

சரணம் நம்பினேன் இயேசு நாதா




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


சரணம் நம்பினேன் இயேசு நாதா.......(3)

ஆ இது தருணம் தருணம்
உந்தன் கருணை துணை தான் -> "சரணம்"

நின் அருளால் இங்கே வந்து
என்றும் நின் அடையுங் கலமாக என்னையே தந்து (2)
உன்னால் வினையை துறந்து (2)
ஆதி மூலமே உனக்கோலம் இரட்சியும் என்று (2) -> "சரணம்"

அலைபாய தொடர்ந்து போராடி
உமது தடி கருணை வர செம்பாத தேடி (2)
தொலையாத வாழ்வை மன்றாடி (2)
அன்பின் ஸ்தொத்தர சங்கீர்த்தன கீதங்கள் பாடி -> "சரணம்"

இனிய கருணை பொழி வேதா
எனை இருக்கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா (2)
பழி வினை நீக்கிய நீர்தான் நாசரை கர்த்தாதி கர்த்தா
உன் கருணையை தா தா -> "சரணம்"


charanam nampinen yeasu naatha.......(3)

aa iethu tharunam tharunam
unthan karunai thunai thaan -> "charanam"

nin arulaal inkey vanthu
yentum nin adaiyung kalamaaga yennaiyea thanthu (2)
unnaal vinaiyai thurranthu (2)
aathi moolamay unnaik kolam iratchiyum yentru (2) -> "charanam"

alaipaaya thodarunthu poraadi
umathu thadi karunai vara chempaatha theydi (2)
tholaiyaatha vaalvai mantaadi (2)
anpin isthosthara sankeerithanam keethainkal paadi -> "charanam"

ieniya karunai polzi waythaa
yenai iruk karathaal anai yen krishthu naathaa (2)
palzi vinai neekiya neetha nasarai karthaathi karthaa
un karunaiyai thaa thaa -> "charanam"

Tuesday, March 9, 2010

மரிப்பாயே ஒரு நாள்




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


மரிப்பாயே ஒரு நாள்..... மனிதா
மரணம் வரும் ஒருநாள்

மனதில் நீ செய்த கற்ப்பனை எல்லாம்
அழிந்தே போய்விடுமே - (2) -> மரிப்பாயே

ஒருநாள் தேவன் உன்னக்காய் மரணமும்
நியாயத் தீர்ப்பும் வைத்தாரே (2)
அவர் முன்னால் நீ நிற்கும் போது யாவுக்கும்
பதில் சொல்ல வேண்டும் - (2) -> மரிப்பாயே

உயிர்த்தெழுதலும் ஜீவனுமான
இயேசு வில் விசுவாசித்து (2)
நித்திய ஜீவனை உம் சொந்தமாக்கிட
உன்னை நீ சமர்ப்பிப்பாயா - (2) -> மரிப்பாயே

Saturday, October 17, 2009

உம்மை நான் நேசிக்கின்றேன் இறைவா இறைவா




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



இறைவா.....இறைவா....இறைவா....இறைவா......இறைவா....
ஆ....ஆ...ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ....ஆ.....ஆ.....ஆ...ஆ......
உம்மை நான் நேசிக்கின்றேன் இறைவா இறைவா.....
உமதன்பு படைப்புகளை நேசிக்கின்றேன் இறைவா..
உம கரத்தின் வல்லமை உணர்கின்றேன் இறைவா..
உம் முகத்தை படைப்பினில் காணுகின்றேன் இறைவா....
இறைவா...இறைவா...உயிரான இறைவா..உடன் வாழும் இறைவா...(உம்மை நான்.....)

1

வானம் பூமி கடல் யாவும் நேசிக்கின்றேன் இறைவா..
கானம் பாடும் பறவைகளை நேசிக்கின்றேன் இறைவா...
அதிகாலை பனிப்பொழிவை நேசிக்கின்றேன் இறைவா...
அழகு மலர்கள் புல்வெளிகள் நேசிக்கின்றேன் இறைவா....
உன் புகழ் உரைக்கின்றேன் உதயம் ஆகிறாய்..(2)
உன்பதம் பணிகின்றேன் ஒளிவிளக்காகிறாய்......
அழகிய என் உலகை அனைத்து காத்திடவே
அன்பால் நிறைத்திடவே ஆற்றல் தருகின்றாய்....
இறைவா...இறைவா...உயிரான இறைவா..உடன் வாழும் இறைவா...(உம்மை நான்.....)

2

கதிரவனை முழுநிலவை நேசிக்கின்றேன் இறைவா....
தவழும் நதி வீசும் தென்றல் நேசிக்கின்றேன் இறைவா....
நீலவானில் நீந்தும் மேகம் நேசிக்கின்றேன் இறைவா.....
வான்பொழியும் மழைப்பொழிவை நேசிக்கின்றேன் இறைவா....
இயற்கையில் சங்கமித்து உன்னைக் காணுகின்றேன்...(2)
இறை உன் படைப்போடு ஒன்றாய்ப் பாடுவேன்......
எல்லா உயிர்களுமே எங்கும் வாழ்ந்திடனும்.......
எல்லா மாந்தருமே மகிழ்வை கண்டிடணும்.....
இறைவா...இறைவா...உயிரான இறைவா..உடன் வாழும் இறைவா...(உம்மை நான்.....)

Tuesday, October 13, 2009

என் இதயம் யாருக்கு தெரியும்




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


என் இதயம் யாருக்கு தெரியும்
என் வேதனை யாருக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
" யார் என்னைத் தேற்றுவார் " (4 ) - என் இதயம்

நெஞ்ஜில் நோவுகள் அதை மிஞ்சும் பாரங்கள் -2
தஞ்சம் இன்றியே நெஞ்சம் ஏங்குதே
நெஞ்சம் ஏங்குதே - என் இதயம்

சிறகு ஒடிந்த பறவை அது வானில் பறக்குமோ -2
உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ
ஒன்று சேருமோ - என் இதயம்

அங்கே தெரியும் வெளிச்சம் அது கலங்கரை தீபமோ -2
இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே
முகத்தின் வெளிச்சமே

என் இதயம் இயேசுவுக்கு தெரியும்
என் வேதனை இயேசுவுக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
" இயேசு என்னைத் தேற்றுவார் " (4 ) - என் இதயம்

Friday, February 20, 2009

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே [2]

எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன் -[2] -எந்தன்

சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே
தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-[2] -எந்தன்

உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேனே -[2] -எந்தன்

Saturday, February 14, 2009

அய்யய்யா நான் ஒரு மாப்பாவி




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


அய்யய்யா நான் ஒரு மாப்பாவி -எனை
ஆண்டு நடத்துமே தேவா நீர் -[2]

அய்யய்யா இது தருணமையா எந்தன்
மீதில் இறங்க சமயமைய்யா

அய்யய்யா இப்போதென் மேலே இறங்குவதும்
அவசியம் வாரவேணும் தேவா நீர் -[2] (அய்ய)

பாதாள லோகத்தின் வாழ்வை எல்லாம் -தினம்
அருவருத்து நான் தள்ளுதற்க்கு

மாசனுகா சுத்த மனம் தருவீர் நீரே
வல்லவராகிய தேவா நீர் -[2] (அய்ய)

பக்தியின் பாதையை விலகாமல் -கெட்ட
பாவத்தில் ஆசைகள் வைய்யாமல்

சத்திய வேதப் படி நடக்க என்னை
தாங்கி நடத்திடும் தேவா நீர் -[2] (அய்ய)

Friday, January 2, 2009

உம்மை அப்பாண்ணு கூப்பிடத்தான் ஆச




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


உம்மை அப்பாண்ணு கூப்பிடத்தான் ஆச
உம்மை அப்பாண்ணு கூப்பிடவா
உம்மை அம்மாண்ணு கூப்பிடத்தான் ஆச
உம்மை அம்மாண்ணு கூப்பிடவா [2]

அப்பாண்ணு கூப்பிடுவேன்
உம்மை அம்மாண்ணு கூப்பிடுவேன்
உம்மை அப்பாண்ணு கூப்பிடுவேன்
உம்மை அம்மாண்ணு கூப்பிடுவேன் -[உம்மை]

கருவில் என்னை சுமந்தத பார்த்தா
அம்மாண்ணு சொல்லணும்
தோழில் என்னை சுமந்தத பார்த்தா
அப்பாண்ணு சொல்லணும் [2]

என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
உம்மை அம்மாண்ணு சொல்லணும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
உம்மை அப்பாண்ணு சொல்லணும் [2]-[உம்மை]

கண்ணீரத் துடச்சதப் பார்த்தா
அம்மாண்ணு சொல்லணும்
என் விண்ணப்பத்தை கேட்டதப்பார்த்தா
அப்பாண்ணு சொல்லணும் -[2]

எண்ணை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
உம்மை அம்மாண்ணு சொல்லணும்
உங்க இரக்கத்த உருக்கத்தப் பார்த்தா
உம்மை அப்பாண்ணு சொல்லணும் [2]-[உம்மை]

Friday, December 26, 2008

கிருபை தேவ கிருபை



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


கிருபை தேவ கிருபை
அது என்றும் உள்ளது

இயேசுவின் தூய கிருபை
அது நம் மேல் உள்ளது [2]

நித்தியமானது சத்தியமானது - கிருபை

தூய்மையில் தவறிய வேளை
தூயவர் தூக்கியே எடுத்தார்
தாய்மையின் கரம் கொண்டு
தாங்கியே அணைத்திட்டார் [2]

உரிமையாய் நம்மையும்
பரிவுடன் நடத்திட்டார் [2] - கிருபை

ஒளியென உலகில் வந்தார்
ஒளியென விளங்கிட அழைத்தார்
ஒளிதரும் தீபங்களாய்
ஒளிர்ந்திட ஜீவிதார் [2]

நீதியின் சூரியனாய்
கரிசனை ஏந்திட்டார் [2]- கிருபை

தந்தானைத் துதிப்போமே திருச்சபையோரே



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


தந்தானைத் துதிப்போமே திருச்
சபையோரே கவி பாடிப்பாடி.

விந்தையாய் நமக்கனந்தனந்த மான
விள்ளற்கரிய தோர் நன்மை மிக மிக

ஓய்யாரத்துச் சீயோனே நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஐயனேசுக் குனின்கையைக் கூப்பித்துதி
செய்குவையே மகிழ்கொள்ளுவையே நாமும்

காண்ணாரக் களித்தாயே -நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னு முன்மெற் சோனா மாரிபோற்பெய்துமே

சுத்தாங்கத்து நற்சபையே உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிது
சத்துக் குலைந்துனைச் சத்தி யாக்கத்தமின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்து உயிர்வரம்

தூரந்திரிந்த சீயோனே உனை
தூக்கி எடுத்துக் கரத்தினிலேந்தி
ஆரங்கள் பூட்டி யலங்கரித்து உன்னை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை

சிங்காரக் கன்னிமாரே உம்
அலங்கார கும்மியடித்துப் படித்து
மங்காத உன் மணவாளன் யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப்பணி ந்திடும்

எனக்கொரு ஆசையுண்டு என் இயேசுவை




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


எனக்கொரு ஆசையுண்டு
என் இயேசுவை காணவேண்டும்
எனக்கொரு ஆவலுண்டு
நான் அவரோடு பேசவேண்டும் [2]

வானகமே வையகமே
எனது ஆசை நிறைவேறுமா [2]
எனது ஆசை நிறைவேறுமா - [எனக்கொரு]

மலையும் காடும் சோலையும்
அலை மோதும் கடலும் தேடினேன் [2]
காணேன் அவரை கதறி அழுதேன்
கர்த்தரே வாரும் வாரும் என்பேன் [2]- [ வானகமே ]

கரம் ஒன்று என்னை தொட்டது
கண்ணீரை மெதுவாய் துடைத்தது [2]
வேதம் தந்தேன் தினமும் அதிலே
என்னைபார் என மொழிந்தது [2]- [ வானகமே ]

தினமும் வேதத்தில் காண்கிறேன்
தேவாதி தேவனைத் துதிக்கிறேன் [2]
ஜெபத்தில் பேசி மகிழுகின்றேன்
ஜீவதேவனை வாழ்த்துகிறேன் [2]
வானகமே வையகமே
எனது ஆசை நிறைவேறிற்றே [2]
எனது ஆசை நிறைவேறிற்றே- [ எனக்கொரு ]

அன்பென்ற மழையிலே அகிலங்கள்



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே.......
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே........
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே......
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே.........
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே.... அதிரூபன் தோன்றினானே..
போர்க்கொண்ட பூமியில் தூக்காடு காணவே....
புகழ் மைந்தன் தோன்றினானே.....

[1]

கல்வாரி மலையிலே கல்லொன்றி பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே....
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாக தோன்றினானே......
இரும்பான நெஞ்சிலே ஈரங்கள் கசியவே
நிறைபாலன் தோன்றினானே.....
முட்க்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவி ராஜன் தோன்றினானே.....

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே.......
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே........[2]

தேவனே நான் உமது அண்டையில்



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


தேவனே நான் உமது அண்டையில்
இன்னும் நெருங்கி
சேர்வதே என் ஆவல் பூமியில் [2]

மாவலிய கோரமாக வன்சிலுவை மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலால் உன் அண்டை சேர்வேன் [தேவனே]

யாக்கோபைப் போல் போகும் பாதையில்
பொழுதுபட்டு இராவினிருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கி உம்மை கிட்டி சேர்வேன்
வாக்கடங்கா நல்ல நாதா - [தேவனே]

பரத்துக்கேறும் படிகள்போலவே என்பாதை தோன்ற
பண்ணும் ஐயா என்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம்
உமது அண்டை அருமையாய் என்னை அழைத்து
அன்பின் பூரணமாக செய்யும் [தேவனே]

Thursday, December 18, 2008

christmas song





!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எனக்கொத்தாசை வரும் Enakkothasai varum




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏர் எடுப்பேன்.[2]

வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே [2]
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்களை ஏர் எடுப்பேன் [2][எனக்கொத்தாசை]

மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலை மாறி புவி அகன்றிடினும் [2]
மாறிடுமோ அவர் கிருபையின் ஆழம்
ஆறுதல் எனக்கவரே [2] [எனக்கொத்தாசை]

என் காலை தள்ளாடஒட்டார்
என்னை காக்கும் தேவன் உறங்கார் [2]
இஸ்ரவேலை காக்கும் நல் தேவன்
இராப்பகல் உறங்காரே [2] [எனக்கொத்தாசை]

எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவை காக்கும் என் தேவன் [2]
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய் [2] [எனக்கொத்தாசை]

Sunday, December 14, 2008

தண்ணீர் இல்லா இடத்தில்




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


தண்ணீர் இல்லா இடத்தில்
ஊற்று ஒன்று கண்டேன் [2]
அன்பே இல்லா இடத்தில்
அன்பான வார்த்தைக் கேட்டேன் [2] (தண்ணீர்)

புண்பட்ட மனதுக் என்றும்
ஆறுதல் நீரே இயேசுவே இயேசுவே
எந்தன் இனிய தெய்வம் என்றும் நீர் தானே
புண்பட்ட மனதுக் என்றும் ஆறுதல் நீரே
ஆற்றும் உம் மகிமை அன்பான வார்த்தை
கேட்டு மகிழ்வேனே (தண்ணீர்)

அம்மாவை கண்டதில்லை
ஏங்கினேன் நானே இயேசுவே இயேசுவே
உந்தன் அரவணைப்பில் கண்டேன் அன்பெல்லாம்
அம்மாவை கண்டதில்லை ஏங்கினேன் நானே
கண்டேன் அரவணைப்பில் அம்மாவின் அன்பை
உறவெல்லாம் இயேசுவே [தண்ணீர்]

Friday, December 12, 2008

மான்கள் நீரோடை வாஞ்சித்து mankal nirotai vanchiththu



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மான்கள் நீரோடை வாஞ்சித்து கவனத்தால் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்தே கதறுமே

தஞ்சனும் நீர் அடைக்கம் நீர் கோட்டையும் நீர்
என்றும் காப்பீர் [2]

தேவன் மேல் ஆத்துமமே தாகமாய் இருக்கிறது [2]
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே [2] (தஞ்சனும்)

யோர்தான் தேசத்திலும் ஏனோன் மலைகளிலும் [2]
சிறு மலைகளில் இருந்தும் உம்மை
நிதமும் நினைத்திடுவேன் [2] (தஞ்சனும்)

ஆத்துமா கலங்குவதேன் தேவனே காத்திருப்பார் [2]
அவரே என் இரட்சிப்பு தினமும்
அவரைத் துதித்திடுவாய் [2] (தஞ்சனும்)

மான்கள் நீரோடை வாஞ்சித்து கவனத்தால் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்தே கதறுமே

***************************************************************

mankal nirotai vanchiththu kavaanaththal thevaane
yenthaan aththuma ummaiye vanchiththe katharrume

thaanchaanum nir ataikkam nir kottaiyum nir
yenrrum kappir [2]

thevaan mel aththumame thakamay irukkirrathu [2]
thevaanin channithiyil ninrrit
aththuma vanchikkuthe [2] (thaanchaanum)

yorthan thechaththilum enon malaikalilum [2]
chirru malaikalil irunthum ummai
nithamum ninaiththituven [2] (thaanchaanum)

aththuma kalaankuvathen thevaane kaththiruppar [2]
avare yen iratchippu thinamum
avaraith thuthiththituvay [2] (thaanchaanum)

mankal nirotai vanchiththu kavaanaththal thevaane
yenthaan aththuma ummaiye vanchiththe katharrume

Wednesday, December 10, 2008

கல்வாரி சிலுவை நாதா kalvaari siluvai naathaa




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கல்வாரி சிலுவை நாதா
கார்இருள் நீக்கும் தேவா [2]

பல்வினை பலனாம் பாவம்
புரிந்தவர் எமைக்கண் பாரும் [2][ கல்வாரி ]

மண்ணுயிர் மீட்கும் அன்பா
தன் உயிர் மாய்த்தாய் அன்பே [2]
மன்பதர் மாந்தர் முன்னால்

தரணியை இளுத்தாய் நின்பால் [2][ கல்வாரி ]

தூயவன் நின்னை கண்டோர்
தீ உள்ளம் தெளிந்தே நிற்பான் [2]
சேய் உள்ளம் தந்தாய் அருளாய்

வாய் உள்ளம் தந்தேன் புகழாய் [2] [ கல்வாரி ]


***************************************************************

kalvari chiluvai natha
karirul nikkum theva [2]

palvinai palaanam pavam
purinthavar yemaikkan parum [2] [ kalvari ]

mannuyir mitkum anpa
than uyir mayththay anpe [2]
maanpathar manthar munnal

tharaniyai iluththay ninpal [2][ kalvari ]

thuyavaan ninnai kantor
thee ullam thelinthe nirrpan [2]
chey ullam thanthay arulay

vaai ullam thanthen pukalay [2] [ kalvari ]

Saturday, November 29, 2008

எந்த காலத்திலும் " yenth kalaththilum



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்

யேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன் [2]

ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே [2] -(எந்த காலத்)

துன்பநேரத்தில் இன்பமே அவர்
இன்னல் வேளையில் என் மாறிடாநேசர் [2] -(எந்த காலத்)

தேவனும் நீரே என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் என் சர்வமும் நீரே [2] -(எந்த காலத்)

***************************************************************
yenth kalaththilum yenth neraththilum
naanrriyal ummai nan thuthippen

yeasuway ummai nan thuthippen thuthippen
yenth velaiyilum thuthippen [2]

aathiyum nire anthamum neeray
jothiyum neeray yen sonthamum neeray [2] -(yenth kalath)

thunpaneraththil inpame avar
innal velaiyil yen marritanechar [2] -(yenth kalath)

thevaanum neeray yen jeevanum neeray
raja rajaanum yen sarvamum neeray [2] -(yenth kalath )

Oh , how I love jesus



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


Oh , how I love jesus[3]
Because He first loved me

There is a neme I love to hear
i love to sing its worth
It sounds like music in my ear
The sweetest name on earth - (Oh , how)

It tells me of my saviors love
Who died to set me free
It tells me of his precious blood
The sinner's perfect plea - (Oh , how)

To me, He is so wonderful
and i love him
Becase He first loved me - (Oh , how)

Sunday, November 2, 2008

கல்வாரி அன்பை Kalvaari Anbai




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே....
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே..... [2]

கெத்சாமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை....[2]
எத்திசை அன்புதொனிக்கின்றதே....
எந்தன் மனம் திகைக்கின்றதே...
கண்கள் கலங்கிடுதே....
கண்கள் கலங்கிடுதே...-(கல்வாரி)

சிலுவையில் மாட்டி வதைத்தனரோ -உம்மை
சென்னிற மாக்கினரோ..... [2]
அப்போதும் அவர்க்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் அன்பு பெரிதே......
அப்பா உம் அன்பு பெரிதே....- (கல்வாரி)

என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே
உன் ஜீவன் தந்தீரன்றோ... [2]
என் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்.
தந்து விட்டேன் அன்பு கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்.......
ஏற்று என்றும் நடத்தும்......-(கல்வாரி......)

Wednesday, September 3, 2008

Tuesday, August 26, 2008

உதவி வரும் கன்மலைநோக்கி Udavi varum kaanmalainokki




உதவி வரும் கன்மலைநோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் [2]

(1)
கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் [2]
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் [2] (உதவி)

(2)
கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார்[2]
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் [2] (உதவி)

(3)
கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் [2]
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் [2] (உதவி)

(4)
போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் [2]
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் [2] (உதவி)

Sunday, August 24, 2008

கர்த்தரையே துதிப்பேன்




ALL LINS COMES ON TWO TIMES

கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்

[1]
நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கதறி கூப்பிட்டேன்
நெருங்கி வந்து குரலை கேட்டு விடுதலைக் கொடுத்தார்
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்
நான் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்

[2]
எனக்கு உதவும் கர்த்தர் எனது நடுவில் இருக்கிறார்
எதிரியான அலகையை நான் எதிர்த்து வென்றிடுவேன்
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்

[3]
எனது பெலனும் எனது மீட்பும் கீதமும் ஆனார்
நம்பி இருக்கும் கேடையமும் கோட்டையும் ஆனார்
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்
நான் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்

[4]
கர்த்தர் எனது பக்கம் இருக்க எதற்கும் பயமில்லை
கடுகளவு பாவம் என்னை அணுக முடியாது
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்
நான் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்

[5]
வல்லமை மிக்கவர் செயல்கள் பல எனக்கு செய்தாரே
உயிரோடு இருந்து உலகத்திற்க்கு எடுத்து சொல்லுவேன்
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான் [5]

Sunday, August 10, 2008

எந்தன் நெஞ்சம் எல்லாம் நன்றி




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


எந்தன் நெஞ்சம் எல்லாம்
நன்றி சொல்லிடுவேன் உள்ளத்தின் ஆழத்திலே [2]

ஆராதனை செய்வோம்
நன்றி என்றும் நான் மறவேன் [எந்தன்]

நோயின் கொடுமையிலே ஓ.....
மரண படுக்கையிலே ஓ..........
கைவிடப்பட்டு நம்பிக்கை இழந்து....
கலங்கி தவித்த நேரத்திலே - இனி
பிழைப்பேனோ என்ற நிலமையிலும்
ஓடி வந்தீரே சுகம் கொடுத்தீரே
இயேசைய்யா நீர் எனது மூப்பியனே.. [எந்தன்]

எதுக்கும் உதவாத ஒ........
குப்பை நான் ஐயா ஓ......
அற்பமான என்னையும் தூக்கி
உமக்காய் தெரிந்து கொண்டீரே
எல்லோருமே என்னை வெறுக்கையிலே
உந்தன் பார்வைக்கா நான் அருமையானேன்
இயேசைய்யா நீர் என்னையும் அழைத்தீரே [எந்தன்]

சிரித்தபோதெல்லோரும் ஓ.....
கூட சிரித்தனரே ஓ.....
அழுதபோது யாரும் இல்லையே
நான் மட்டும் தானே அழுதேன்
என் வாழ்விலும் என் தாழ்விலேயும்
இன்பதுன்பமோ எந்த நிலையிலும்
பிரியாமல் நீர் கூட இருக்கின்றீரே [எந்தன்]

கண்ணீரோடு நன்றியை காணிக்கையாக்குகிறேன் [எந்தன்]

நம்பி வந்தேன் இயேசையா

Tuesday, August 5, 2008

ஆத்துமமே என் முழு உள்ளமே





ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் ஆண்டவரை தொழுதேத்து
இந்ந நாள் வரை அன்புவைத் ஆதரித்த
உன் ஆண்டவரை தொழுதேத்து [2]

போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர்
சற்றுதர்க் அரிய தன்மை உள்ள......[2] (ஆத்துமமே என் )

தலைமுறை தலைமுறை தாங்கும் வினோத
உலகம் முன் தோங்கி ஒழியாத......[2] (ஆத்துமமே என் )

தினம் தினம் உலகில் நீ செய்பலவான
வினை பொறுத்தருளும் மேலான......[2] (ஆத்துமமே என் )

வாதை நோய் துன்பம் மாற்றி ஆனந்த
போதரும் தயை செய்து உயிர் தந்த......[2] (ஆத்துமமே என் )

முற்றுனக் இரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்......[2] (ஆத்துமமே என் )

Friday, August 1, 2008

என் மனம் பாடும் பாடலிது தேவா..




என் மனம் பாடும் பாடலிது தேவா..
என் மனம் பாடும் பாடலிது தேவா..
என்னுள்ளே தீரா தாகமிது நாதா...
நீர் தரும் நேசம் நினைவினில் வாழும்...(2)
நிலையில்லா பனிபோல என் சோகம் மாறும்.....(என் மனம்....)

[1]

நினைவெல்லாம் மலராக நீ மலர்ந்தாய்
நிம்மதி நீ கொணர்ந்தாய்........(2)
கனவெல்லாம் கானல் நீரோ...
நான் கண்ணீரில் வாழும் மீனோ...
உன் திருவடியே என் மனம் சரணம்..
உளமதிலே நீ உன் ஒளி தரனும்....(என் மனம்...)

[2]

வழி மீது விழி வைத்து ஒளி தேடினேன்
இருளினில் நான் விழுந்தேன்.....(2)
நான் என்ன வாடும் பூவோ...
இல்லை உன் பாதம் சூடும் பூவோ...
என் மனம் நீ வா... நிம்மதியை தா...
என் முகம் தனிலே... புன்னகையை தா.....(என் மனம்....)

Wednesday, July 30, 2008

இயேசுவே உம்மை காணாமல் இமைகள்




இயேசுவே உன்னை காணாமல்
இயேசுவே உன்..னை காணாமல்... இமைகள் உறங்காது....
இயேசுவே உன்..னை காணாமல் இமைகள் உறங்காது.... [2]
சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது......
சுமைகள் இறங்காது...
இயேசுவே உன்..னை காணாமல் இமைகள் உறங்காது.

[1]

கடலினை சென்...று சேராமல்..... நதிகள் அடங்காது....
உடல் எனும் கூட்டினில் சேரா..மல் உயிர்கள் வாழாது....
ஊரினை வந்து அடையாமல்... பாதைகள் முடியாது.....
உன்னை கண்டு பேசா..மல் உள்ளம் அடங்காது...
இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது....
உள்ளம் அடங்காது......
இயேசுவே உன்..னை காணாமல்... இமைகள் உறங்கா..து..

[2]

உயிர் தரும் தோ...ழமை இல்லாமல்.... உறவுகள் தொடராது.....
தாங்கிடும் செடிகள் இல்லா..மல் கொடிகள் படராது....
கரங்களை பிடித்து நடக்காமல்... பாதையில் பலமேது....
சிறகதன் நிழலில் அமரா..மல் ஆறுதல் எனக்கேது....
இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது..
ஆறுதல் எனக்கேது...

இயேசுவே உன்..னை காணா...மல்... இமைகள் உறங்காது..
சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது
சுமைகள் இறங்காது.....
சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது......
சுமைகள் இறங்காது......
இயேசுவே உன்..னை காணா..மல்... இமைகள் உறங்கா..து.......