Monday, June 30, 2008

தேனினுமையிலும் இயேசுவின் நாமம்



================================================

தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே
அதை தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

1* காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உட்தரித்தீர்
பாவ கசடதை அறுத்து சாபத்தை தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

2* பாவியை மீட்க தாவியே உயிரை தாமே ஈன்றவராம்
பின்னும் நேமியாம் கருணை நிலை வரம் உண்டு
நிதம் துதி என் மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

3* காலையில் பனி போல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கி விடும்
என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

4* துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம்
நீயும் அன்பதாய் சேர்ந்தால் அணைத்துணை காப்பார்
ஆசை கொள் நீ மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

5* பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்றும் நாமம்
அதை பூண்டு கொண்டால் தான் புன்நகர் வாழ்வில் புகுவாய் நீமனமே

தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே
அதை தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

Sunday, June 22, 2008

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ



================================================

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ
நேச மனாழர் மேல் தூவிடுவோம் (2)

மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல் மணமக்கள் மீது நாம் எல்லா மலரும் தூவிடுவோம்

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ
நேச மனாழர் மேல் தூவிடுவோம் (2)

மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்னுடன்
அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம்

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ
நேச மனாழர் மேல் தூவிடுவோம்

புத்திர பாக்கியம் புகளும் நாள் வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்று இவர் என்றும்
பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம்

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ
நேச மனாழர் மேல் தூவிடுவோம்

கறை திறையற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணியே இப்போ
நேசமணாளன் மேல் தூவிடுவோம்

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ
நேச மனாழர் மேல் தூவிடுவோம் (2)

Friday, June 20, 2008

உன்னதமானவரின் உயர் மறைவினில் இருக்கிறவன்



================================================

உன்னதமானவரின் உயர் மறைவினில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே (2)

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தாம் சிறகுகளால் மூடுவார் (2)

தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணும் அவர்
அவர் சத்திய பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே (2)

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தாம் சிறகுகளால் மூடுவார் (2)

இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் (2)

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தாம் சிறகுகளால் மூடுவார் (2)

ஆபத்திலும் அவரை நான் நோக்கி கூப்பிடும் வேளையிலும்
என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் (2)

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தாம் சிறகுகளால் மூடுவார் (2)

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்



================================================

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு
தேடுங்கள் கிடைக்கும் என்றார்...( 2 )


பெத்தலகேம் நகரில் மாட்டுதொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா....
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா....( 2 ) (கேளுங்கள்.......)


ஆறு வயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
ஆகமங்கள் ஐம்பத்தாரையும் ஐயம் தீர உணர்ந்தார்.
இயற்க்கை உலகமே தூய்மையானது என
இயேசு நினைத்தாரே....
எல்ல உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே..( 2 ) (கேளுங்கள்...)


ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே ( 2 )
பணிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
இயேசு கேள்வியில் ஆலயகுருக்கள் ஆனந்தமானாரே....
இளமையில் செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே...( 2 )
இளமைபருவத்தில் எளிய வாழ்கையில் இருப்பிடமானாரே......
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -( கேளுங்கள்..(2))


தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே.... ( 2 )
நிலங்களை உழுவதுபோல் உள்ளத்தை உளுங்கள் என்று
உலக பிதா சொன்ன போது உழவர்கள், தொழிலாள
ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர்
இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர்.....

அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டுயென்றார்
இயேசு ஆண்டவன் தொண்டுயென்றார்..
முப்பதாம் வயதில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
ஞானஸ்தானமும் பெற்றாரே......

துன்பத்தை அகற் இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே ( 2 )
இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக்கொடுத்தனே
முப்பது காசுக்காகவே காட்டிக்கொடுத்தனே
ஜனகரீம் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே
தெய்வநிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே ( 2 )
சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே (கேளுங்கள்.......)