Friday, December 26, 2008

கிருபை தேவ கிருபை



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


கிருபை தேவ கிருபை
அது என்றும் உள்ளது

இயேசுவின் தூய கிருபை
அது நம் மேல் உள்ளது [2]

நித்தியமானது சத்தியமானது - கிருபை

தூய்மையில் தவறிய வேளை
தூயவர் தூக்கியே எடுத்தார்
தாய்மையின் கரம் கொண்டு
தாங்கியே அணைத்திட்டார் [2]

உரிமையாய் நம்மையும்
பரிவுடன் நடத்திட்டார் [2] - கிருபை

ஒளியென உலகில் வந்தார்
ஒளியென விளங்கிட அழைத்தார்
ஒளிதரும் தீபங்களாய்
ஒளிர்ந்திட ஜீவிதார் [2]

நீதியின் சூரியனாய்
கரிசனை ஏந்திட்டார் [2]- கிருபை

தந்தானைத் துதிப்போமே திருச்சபையோரே



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


தந்தானைத் துதிப்போமே திருச்
சபையோரே கவி பாடிப்பாடி.

விந்தையாய் நமக்கனந்தனந்த மான
விள்ளற்கரிய தோர் நன்மை மிக மிக

ஓய்யாரத்துச் சீயோனே நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஐயனேசுக் குனின்கையைக் கூப்பித்துதி
செய்குவையே மகிழ்கொள்ளுவையே நாமும்

காண்ணாரக் களித்தாயே -நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னு முன்மெற் சோனா மாரிபோற்பெய்துமே

சுத்தாங்கத்து நற்சபையே உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிது
சத்துக் குலைந்துனைச் சத்தி யாக்கத்தமின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்து உயிர்வரம்

தூரந்திரிந்த சீயோனே உனை
தூக்கி எடுத்துக் கரத்தினிலேந்தி
ஆரங்கள் பூட்டி யலங்கரித்து உன்னை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை

சிங்காரக் கன்னிமாரே உம்
அலங்கார கும்மியடித்துப் படித்து
மங்காத உன் மணவாளன் யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப்பணி ந்திடும்

எனக்கொரு ஆசையுண்டு என் இயேசுவை




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


எனக்கொரு ஆசையுண்டு
என் இயேசுவை காணவேண்டும்
எனக்கொரு ஆவலுண்டு
நான் அவரோடு பேசவேண்டும் [2]

வானகமே வையகமே
எனது ஆசை நிறைவேறுமா [2]
எனது ஆசை நிறைவேறுமா - [எனக்கொரு]

மலையும் காடும் சோலையும்
அலை மோதும் கடலும் தேடினேன் [2]
காணேன் அவரை கதறி அழுதேன்
கர்த்தரே வாரும் வாரும் என்பேன் [2]- [ வானகமே ]

கரம் ஒன்று என்னை தொட்டது
கண்ணீரை மெதுவாய் துடைத்தது [2]
வேதம் தந்தேன் தினமும் அதிலே
என்னைபார் என மொழிந்தது [2]- [ வானகமே ]

தினமும் வேதத்தில் காண்கிறேன்
தேவாதி தேவனைத் துதிக்கிறேன் [2]
ஜெபத்தில் பேசி மகிழுகின்றேன்
ஜீவதேவனை வாழ்த்துகிறேன் [2]
வானகமே வையகமே
எனது ஆசை நிறைவேறிற்றே [2]
எனது ஆசை நிறைவேறிற்றே- [ எனக்கொரு ]

அன்பென்ற மழையிலே அகிலங்கள்



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே.......
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே........
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே......
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே.........
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே.... அதிரூபன் தோன்றினானே..
போர்க்கொண்ட பூமியில் தூக்காடு காணவே....
புகழ் மைந்தன் தோன்றினானே.....

[1]

கல்வாரி மலையிலே கல்லொன்றி பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே....
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாக தோன்றினானே......
இரும்பான நெஞ்சிலே ஈரங்கள் கசியவே
நிறைபாலன் தோன்றினானே.....
முட்க்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவி ராஜன் தோன்றினானே.....

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே.......
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே........[2]

தேவனே நான் உமது அண்டையில்



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


தேவனே நான் உமது அண்டையில்
இன்னும் நெருங்கி
சேர்வதே என் ஆவல் பூமியில் [2]

மாவலிய கோரமாக வன்சிலுவை மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலால் உன் அண்டை சேர்வேன் [தேவனே]

யாக்கோபைப் போல் போகும் பாதையில்
பொழுதுபட்டு இராவினிருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கி உம்மை கிட்டி சேர்வேன்
வாக்கடங்கா நல்ல நாதா - [தேவனே]

பரத்துக்கேறும் படிகள்போலவே என்பாதை தோன்ற
பண்ணும் ஐயா என்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம்
உமது அண்டை அருமையாய் என்னை அழைத்து
அன்பின் பூரணமாக செய்யும் [தேவனே]

Thursday, December 18, 2008

christmas song





!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எனக்கொத்தாசை வரும் Enakkothasai varum




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏர் எடுப்பேன்.[2]

வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே [2]
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்களை ஏர் எடுப்பேன் [2][எனக்கொத்தாசை]

மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலை மாறி புவி அகன்றிடினும் [2]
மாறிடுமோ அவர் கிருபையின் ஆழம்
ஆறுதல் எனக்கவரே [2] [எனக்கொத்தாசை]

என் காலை தள்ளாடஒட்டார்
என்னை காக்கும் தேவன் உறங்கார் [2]
இஸ்ரவேலை காக்கும் நல் தேவன்
இராப்பகல் உறங்காரே [2] [எனக்கொத்தாசை]

எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவை காக்கும் என் தேவன் [2]
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய் [2] [எனக்கொத்தாசை]

Sunday, December 14, 2008

தண்ணீர் இல்லா இடத்தில்




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


தண்ணீர் இல்லா இடத்தில்
ஊற்று ஒன்று கண்டேன் [2]
அன்பே இல்லா இடத்தில்
அன்பான வார்த்தைக் கேட்டேன் [2] (தண்ணீர்)

புண்பட்ட மனதுக் என்றும்
ஆறுதல் நீரே இயேசுவே இயேசுவே
எந்தன் இனிய தெய்வம் என்றும் நீர் தானே
புண்பட்ட மனதுக் என்றும் ஆறுதல் நீரே
ஆற்றும் உம் மகிமை அன்பான வார்த்தை
கேட்டு மகிழ்வேனே (தண்ணீர்)

அம்மாவை கண்டதில்லை
ஏங்கினேன் நானே இயேசுவே இயேசுவே
உந்தன் அரவணைப்பில் கண்டேன் அன்பெல்லாம்
அம்மாவை கண்டதில்லை ஏங்கினேன் நானே
கண்டேன் அரவணைப்பில் அம்மாவின் அன்பை
உறவெல்லாம் இயேசுவே [தண்ணீர்]

Friday, December 12, 2008

மான்கள் நீரோடை வாஞ்சித்து mankal nirotai vanchiththu



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மான்கள் நீரோடை வாஞ்சித்து கவனத்தால் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்தே கதறுமே

தஞ்சனும் நீர் அடைக்கம் நீர் கோட்டையும் நீர்
என்றும் காப்பீர் [2]

தேவன் மேல் ஆத்துமமே தாகமாய் இருக்கிறது [2]
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே [2] (தஞ்சனும்)

யோர்தான் தேசத்திலும் ஏனோன் மலைகளிலும் [2]
சிறு மலைகளில் இருந்தும் உம்மை
நிதமும் நினைத்திடுவேன் [2] (தஞ்சனும்)

ஆத்துமா கலங்குவதேன் தேவனே காத்திருப்பார் [2]
அவரே என் இரட்சிப்பு தினமும்
அவரைத் துதித்திடுவாய் [2] (தஞ்சனும்)

மான்கள் நீரோடை வாஞ்சித்து கவனத்தால் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்தே கதறுமே

***************************************************************

mankal nirotai vanchiththu kavaanaththal thevaane
yenthaan aththuma ummaiye vanchiththe katharrume

thaanchaanum nir ataikkam nir kottaiyum nir
yenrrum kappir [2]

thevaan mel aththumame thakamay irukkirrathu [2]
thevaanin channithiyil ninrrit
aththuma vanchikkuthe [2] (thaanchaanum)

yorthan thechaththilum enon malaikalilum [2]
chirru malaikalil irunthum ummai
nithamum ninaiththituven [2] (thaanchaanum)

aththuma kalaankuvathen thevaane kaththiruppar [2]
avare yen iratchippu thinamum
avaraith thuthiththituvay [2] (thaanchaanum)

mankal nirotai vanchiththu kavaanaththal thevaane
yenthaan aththuma ummaiye vanchiththe katharrume

Wednesday, December 10, 2008

கல்வாரி சிலுவை நாதா kalvaari siluvai naathaa




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கல்வாரி சிலுவை நாதா
கார்இருள் நீக்கும் தேவா [2]

பல்வினை பலனாம் பாவம்
புரிந்தவர் எமைக்கண் பாரும் [2][ கல்வாரி ]

மண்ணுயிர் மீட்கும் அன்பா
தன் உயிர் மாய்த்தாய் அன்பே [2]
மன்பதர் மாந்தர் முன்னால்

தரணியை இளுத்தாய் நின்பால் [2][ கல்வாரி ]

தூயவன் நின்னை கண்டோர்
தீ உள்ளம் தெளிந்தே நிற்பான் [2]
சேய் உள்ளம் தந்தாய் அருளாய்

வாய் உள்ளம் தந்தேன் புகழாய் [2] [ கல்வாரி ]


***************************************************************

kalvari chiluvai natha
karirul nikkum theva [2]

palvinai palaanam pavam
purinthavar yemaikkan parum [2] [ kalvari ]

mannuyir mitkum anpa
than uyir mayththay anpe [2]
maanpathar manthar munnal

tharaniyai iluththay ninpal [2][ kalvari ]

thuyavaan ninnai kantor
thee ullam thelinthe nirrpan [2]
chey ullam thanthay arulay

vaai ullam thanthen pukalay [2] [ kalvari ]

Saturday, November 29, 2008

எந்த காலத்திலும் " yenth kalaththilum



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்

யேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன் [2]

ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே [2] -(எந்த காலத்)

துன்பநேரத்தில் இன்பமே அவர்
இன்னல் வேளையில் என் மாறிடாநேசர் [2] -(எந்த காலத்)

தேவனும் நீரே என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் என் சர்வமும் நீரே [2] -(எந்த காலத்)

***************************************************************
yenth kalaththilum yenth neraththilum
naanrriyal ummai nan thuthippen

yeasuway ummai nan thuthippen thuthippen
yenth velaiyilum thuthippen [2]

aathiyum nire anthamum neeray
jothiyum neeray yen sonthamum neeray [2] -(yenth kalath)

thunpaneraththil inpame avar
innal velaiyil yen marritanechar [2] -(yenth kalath)

thevaanum neeray yen jeevanum neeray
raja rajaanum yen sarvamum neeray [2] -(yenth kalath )

Oh , how I love jesus



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


Oh , how I love jesus[3]
Because He first loved me

There is a neme I love to hear
i love to sing its worth
It sounds like music in my ear
The sweetest name on earth - (Oh , how)

It tells me of my saviors love
Who died to set me free
It tells me of his precious blood
The sinner's perfect plea - (Oh , how)

To me, He is so wonderful
and i love him
Becase He first loved me - (Oh , how)

Sunday, November 2, 2008

கல்வாரி அன்பை Kalvaari Anbai




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே....
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே..... [2]

கெத்சாமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை....[2]
எத்திசை அன்புதொனிக்கின்றதே....
எந்தன் மனம் திகைக்கின்றதே...
கண்கள் கலங்கிடுதே....
கண்கள் கலங்கிடுதே...-(கல்வாரி)

சிலுவையில் மாட்டி வதைத்தனரோ -உம்மை
சென்னிற மாக்கினரோ..... [2]
அப்போதும் அவர்க்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் அன்பு பெரிதே......
அப்பா உம் அன்பு பெரிதே....- (கல்வாரி)

என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே
உன் ஜீவன் தந்தீரன்றோ... [2]
என் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்.
தந்து விட்டேன் அன்பு கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்.......
ஏற்று என்றும் நடத்தும்......-(கல்வாரி......)

Wednesday, September 3, 2008

Tuesday, August 26, 2008

உதவி வரும் கன்மலைநோக்கி Udavi varum kaanmalainokki




உதவி வரும் கன்மலைநோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் [2]

(1)
கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் [2]
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் [2] (உதவி)

(2)
கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார்[2]
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் [2] (உதவி)

(3)
கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் [2]
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் [2] (உதவி)

(4)
போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் [2]
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் [2] (உதவி)

Sunday, August 24, 2008

கர்த்தரையே துதிப்பேன்




ALL LINS COMES ON TWO TIMES

கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்

[1]
நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கதறி கூப்பிட்டேன்
நெருங்கி வந்து குரலை கேட்டு விடுதலைக் கொடுத்தார்
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்
நான் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்

[2]
எனக்கு உதவும் கர்த்தர் எனது நடுவில் இருக்கிறார்
எதிரியான அலகையை நான் எதிர்த்து வென்றிடுவேன்
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்

[3]
எனது பெலனும் எனது மீட்பும் கீதமும் ஆனார்
நம்பி இருக்கும் கேடையமும் கோட்டையும் ஆனார்
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்
நான் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்

[4]
கர்த்தர் எனது பக்கம் இருக்க எதற்கும் பயமில்லை
கடுகளவு பாவம் என்னை அணுக முடியாது
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்
நான் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்

[5]
வல்லமை மிக்கவர் செயல்கள் பல எனக்கு செய்தாரே
உயிரோடு இருந்து உலகத்திற்க்கு எடுத்து சொல்லுவேன்
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான் [5]

Sunday, August 10, 2008

எந்தன் நெஞ்சம் எல்லாம் நன்றி




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


எந்தன் நெஞ்சம் எல்லாம்
நன்றி சொல்லிடுவேன் உள்ளத்தின் ஆழத்திலே [2]

ஆராதனை செய்வோம்
நன்றி என்றும் நான் மறவேன் [எந்தன்]

நோயின் கொடுமையிலே ஓ.....
மரண படுக்கையிலே ஓ..........
கைவிடப்பட்டு நம்பிக்கை இழந்து....
கலங்கி தவித்த நேரத்திலே - இனி
பிழைப்பேனோ என்ற நிலமையிலும்
ஓடி வந்தீரே சுகம் கொடுத்தீரே
இயேசைய்யா நீர் எனது மூப்பியனே.. [எந்தன்]

எதுக்கும் உதவாத ஒ........
குப்பை நான் ஐயா ஓ......
அற்பமான என்னையும் தூக்கி
உமக்காய் தெரிந்து கொண்டீரே
எல்லோருமே என்னை வெறுக்கையிலே
உந்தன் பார்வைக்கா நான் அருமையானேன்
இயேசைய்யா நீர் என்னையும் அழைத்தீரே [எந்தன்]

சிரித்தபோதெல்லோரும் ஓ.....
கூட சிரித்தனரே ஓ.....
அழுதபோது யாரும் இல்லையே
நான் மட்டும் தானே அழுதேன்
என் வாழ்விலும் என் தாழ்விலேயும்
இன்பதுன்பமோ எந்த நிலையிலும்
பிரியாமல் நீர் கூட இருக்கின்றீரே [எந்தன்]

கண்ணீரோடு நன்றியை காணிக்கையாக்குகிறேன் [எந்தன்]

நம்பி வந்தேன் இயேசையா

Tuesday, August 5, 2008

ஆத்துமமே என் முழு உள்ளமே





ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் ஆண்டவரை தொழுதேத்து
இந்ந நாள் வரை அன்புவைத் ஆதரித்த
உன் ஆண்டவரை தொழுதேத்து [2]

போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர்
சற்றுதர்க் அரிய தன்மை உள்ள......[2] (ஆத்துமமே என் )

தலைமுறை தலைமுறை தாங்கும் வினோத
உலகம் முன் தோங்கி ஒழியாத......[2] (ஆத்துமமே என் )

தினம் தினம் உலகில் நீ செய்பலவான
வினை பொறுத்தருளும் மேலான......[2] (ஆத்துமமே என் )

வாதை நோய் துன்பம் மாற்றி ஆனந்த
போதரும் தயை செய்து உயிர் தந்த......[2] (ஆத்துமமே என் )

முற்றுனக் இரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்......[2] (ஆத்துமமே என் )

Friday, August 1, 2008

என் மனம் பாடும் பாடலிது தேவா..




என் மனம் பாடும் பாடலிது தேவா..
என் மனம் பாடும் பாடலிது தேவா..
என்னுள்ளே தீரா தாகமிது நாதா...
நீர் தரும் நேசம் நினைவினில் வாழும்...(2)
நிலையில்லா பனிபோல என் சோகம் மாறும்.....(என் மனம்....)

[1]

நினைவெல்லாம் மலராக நீ மலர்ந்தாய்
நிம்மதி நீ கொணர்ந்தாய்........(2)
கனவெல்லாம் கானல் நீரோ...
நான் கண்ணீரில் வாழும் மீனோ...
உன் திருவடியே என் மனம் சரணம்..
உளமதிலே நீ உன் ஒளி தரனும்....(என் மனம்...)

[2]

வழி மீது விழி வைத்து ஒளி தேடினேன்
இருளினில் நான் விழுந்தேன்.....(2)
நான் என்ன வாடும் பூவோ...
இல்லை உன் பாதம் சூடும் பூவோ...
என் மனம் நீ வா... நிம்மதியை தா...
என் முகம் தனிலே... புன்னகையை தா.....(என் மனம்....)

Wednesday, July 30, 2008

இயேசுவே உம்மை காணாமல் இமைகள்




இயேசுவே உன்னை காணாமல்
இயேசுவே உன்..னை காணாமல்... இமைகள் உறங்காது....
இயேசுவே உன்..னை காணாமல் இமைகள் உறங்காது.... [2]
சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது......
சுமைகள் இறங்காது...
இயேசுவே உன்..னை காணாமல் இமைகள் உறங்காது.

[1]

கடலினை சென்...று சேராமல்..... நதிகள் அடங்காது....
உடல் எனும் கூட்டினில் சேரா..மல் உயிர்கள் வாழாது....
ஊரினை வந்து அடையாமல்... பாதைகள் முடியாது.....
உன்னை கண்டு பேசா..மல் உள்ளம் அடங்காது...
இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது....
உள்ளம் அடங்காது......
இயேசுவே உன்..னை காணாமல்... இமைகள் உறங்கா..து..

[2]

உயிர் தரும் தோ...ழமை இல்லாமல்.... உறவுகள் தொடராது.....
தாங்கிடும் செடிகள் இல்லா..மல் கொடிகள் படராது....
கரங்களை பிடித்து நடக்காமல்... பாதையில் பலமேது....
சிறகதன் நிழலில் அமரா..மல் ஆறுதல் எனக்கேது....
இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது..
ஆறுதல் எனக்கேது...

இயேசுவே உன்..னை காணா...மல்... இமைகள் உறங்காது..
சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது
சுமைகள் இறங்காது.....
சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது......
சுமைகள் இறங்காது......
இயேசுவே உன்..னை காணா..மல்... இமைகள் உறங்கா..து.......

Tuesday, July 29, 2008

நீயே நிரந்தரம் இயேசுவே என் வாழ்வில்





நீயே நிரந்தரம்.
நீயே நிரந்தரம்.....இயேசுவே.....என்.... வா...ழ்வில்... நீயே நிரந்..தரம்..
ஆ......ஆ........ஆ......ஆ......ஆ.......ஆ.......
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்....
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்...
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்....(2)
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்... ஆ...ஆ..(அம்மை அப்பன்...)

1

தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்.....
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்....
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்.....
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்.....(2)
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்......

2

செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்...
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்....
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்..
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்.....(2)
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்..
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்.....(அம்மை அப்பன்...)

Monday, July 28, 2008

நற்கருணை நாதனே சற்குருவே




நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை [ 2 ]

கோதுமை கனிமணி போல்
தீ திலோர் குண நலன்கள்
யோக்கியமாய் சேர்ந்திடவே
தூயனே அருள் மலை போழிவாய் [ 2 ]
நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை

திராட்ச்சை கனி ரசமே
தெய்வீக பானமதாம்
பொருளினில் மாறுதல் போல்
புவிக்கு ஒரு புது முகம் நல்கிடுவார் [2]
நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை

சுவை மிகு தீங்கனியே
திகட்டாத தேன் சுவையே
தித்திக்கும் கிருபையினாலெ
எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் [2]
நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை

தேடி வந்தவரே
தினம் உனதன்பாலே
தாய் மனம் போல் அருழி
தாரணி செழித்தோங்கிடவே [2]
நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை [2]

Thursday, July 24, 2008

கண்டேன் என் கண்குழிர கர்த்தனை




கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர

கொண்டாடும் விண்ணோர்கள் கோமானை கையில் ஏந்தி [ 2 ]
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர

பெத்தலேம் சத்திர முன்னணையில் [ 2 ]
உற்றோர்க்கு உயிர் தரும் உன்மையாம் என் ரட்சகனை
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர

தேவாதி தேவணை தேவ சேனை [ 2 ]
ஓயாது தோத்தரிக்கும் ஒப்பு நிகரற்றவனை
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர

மண்ணோர் இருள் போக்கும் மா மனியை [2]
கண்டோர்ரும் வேண்டி நிற்க்கும் வெண்மணியை கண்மணியை
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர

அன்டினோர் கண்புருவம் ஆரணனை [2]
கண்டோர்கள் களித்திர்க்கும் காரணனை பூரணனை
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர
கண் குழிர கண் குழிர

Tuesday, July 22, 2008

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்




லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் [ 2 ]

பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் [2 ]
மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் [2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் [ 2 ]
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் [ 2 ]
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் [2]

Wednesday, July 16, 2008

தெய்வம் தந்த திவ்யகுமாரன் Theyvam thanth thivyakumaraan




தெய்வம் தந்த திவ்யகுமாரன் வந்தார்... வந்தார்
ஏழை எந்தன் மீது இரங்கி வந்தார்... வந்தார் (2)

இருளில் அருளோதயம் போல வந்தார்... வந்தார்
" மறை நூல் கூறும் உண்மை நிறைவேறவந்தார் " (2)

தெய்வம் தந்த திவ்யகுமாரன் வந்தார்... வந்தார்
ஏழை எந்தன் மீது இரங்கி வந்தார்... வந்தார்

அளவில்லாத அன்புடன் இன்றே வந்தார்... வந்தார்
" விலை இல்லாத மீட்பை தேடி தந்தார்... தந்தார் " (2)

தெய்வம் தந்த திவ்யகுமாரன் வந்தார்... வந்தார்
ஏழை எந்தன் மீது இரங்கி வந்தார்... வந்தார் (2)
வந்தார்... வந்தார் வந்தார்... வந்தார்


Theyvam thanth thivyakumaraan vanthar... vanthar
Yealai yenthaan methu iraanki vanthar... vanthar (2)

Irulil arulothayam pol vanthar... vanthar
" Marrai nool koorum unmai nirraiverravanthar " (2)

Theyvam thanth thivyakumaraan vanthar... vanthar
Yealai yenthaan meethu iraanki vanthar... vanthar

Alavillath anputaan inrre vanthar... vanthar
" Vilai illath mitpai theti thanthar... thanthar " (2)

Theyvam thanth thivyakumaraan vanthar... vanthar
Vealai yenthaan meethu iraanki vanthar... vanthar (2)
Vanthar... vanthar vanthar... vanthar

வாதை உந்தன் கூடாரத்தை Vaadhai undhan koodaarathai




வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது
நேரிடாது மகளே

உன்னதமான கர்த்தரையே
உறைவிடமாக்கி கொண்டாய்
அடைகலமான ஆண்டவனை
ஆதாயமாக்கி கொண்டாய்

ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்
சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு
அன்றாடம் வெற்றி உண்டு

கர்த்தருக்குள் நம் பாடுகள்
ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன்
அதிகமாய் செயல்படுவோம்

அழைத்தவரோ உண்மையுள்ளவர்
பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்
குற்றமின்றி காத்திடுவார்

நம்முடைய குடியிருப்பு
பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை
எதிர்நோக்கி காத்திருப்போம்

அற்பமான ஆரம்பத்தை
அசட்டை பண்ணதே
தொடங்கினவர் முடித்திடுவார்
சொன்னதை செய்திடுவார்

ஆற்றல் அல்ல சக்தி அல்ல
ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
துணையாளர் முன் செல்கிறார்


Vaadhai undhan koodaarathai
Anugaadhu maganae
Pollappu neridaadhu
Neridaadhu magalae

Unnadhamaana kartharaiyae
Uraividamakki kondaai
Adaikalamaana aandavanai
Aadhaayamaakki kondai

Aattukutti ratthathinall
Sathaanai jeyitthu vittim
Aavi unndu vasanam unndu
Andraadam vettri unndu

Kartharukkul nampaadugal
Oru naalum venaagaadhu
Asaiyaamal urudhiyudan
Adhigamaai seyalpaduvom

Azhaitthavaro unmaiyullanar
Parisutthamaakkiduvaar
Aavi aathumaa sareeramellaam
Kuttramindri katthiduvaar

Nammudaiya kudiyiruppu
Paralogatthil unndu
Varappogum ratchagarai
Yedhirnokki kaatthiruppom

Arpamaana aarambatthai
Asattai pannadhae
Thodanginavar mudithduvaar
Sonnadhai seidhiduvaar

Aattral alla sakthi alla
Aaviyinaal aagum
Sornthidaamal nanmai seivom
Thunaiyaalar mun selgiaar

Monday, July 14, 2008

இரத்த கோட்டைக்குள்ளே Rattha kottaikullae




இரத்த கோட்டைக்குள்ளே
நான் நுழைந்து விட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்த தீங்கும் தீண்டாது

நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்

இம்மட்டும் உதவின எபிநேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என்தேவன் பெரியவரே

தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்

தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனை போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் – என்னை

மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்து கொண்டீர்
அணைத்து சேர்த்து கொண்டீர்


Rattha kottaikullae naan
Nuzhaindhu vittaen
Yini yedhuvum anugaadhu
Yendha theengum theendaadhu

Naesarin rattham yenmelae
Nerunhaadhu saathann
Paasamaai siluvaiyil baliyaanaar
Paavathai vaendru vittaar

Yimmattum udhavina yebinesarae
Yiniyum kaatthiduvaar
Ulagilae uirukkum avanai visa
Yendhevan periyavarae

Dhevanae oliyum meetpumaanaar
Yarukku anjiduvaen
Avarae yen vazhvin belanaanaar
Yarukku bayappaduvaen

Thaai than pillaiyai marandhaalum
Maravaadha yen nesarae
Aayanai pola nadatthugireer
Abishegam seiigindreer – yennai

Malaigal kundrugal vilaginaalum
Maaraadu umm kirubai
Anaadhi sinaegatthaal yizhuttu kondeer
Anaithu serthu kondeer

Monday, June 30, 2008

தேனினுமையிலும் இயேசுவின் நாமம்



================================================

தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே
அதை தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

1* காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உட்தரித்தீர்
பாவ கசடதை அறுத்து சாபத்தை தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

2* பாவியை மீட்க தாவியே உயிரை தாமே ஈன்றவராம்
பின்னும் நேமியாம் கருணை நிலை வரம் உண்டு
நிதம் துதி என் மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

3* காலையில் பனி போல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கி விடும்
என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

4* துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம்
நீயும் அன்பதாய் சேர்ந்தால் அணைத்துணை காப்பார்
ஆசை கொள் நீ மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

5* பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்றும் நாமம்
அதை பூண்டு கொண்டால் தான் புன்நகர் வாழ்வில் புகுவாய் நீமனமே

தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே
அதை தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

Sunday, June 22, 2008

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ



================================================

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ
நேச மனாழர் மேல் தூவிடுவோம் (2)

மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல் மணமக்கள் மீது நாம் எல்லா மலரும் தூவிடுவோம்

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ
நேச மனாழர் மேல் தூவிடுவோம் (2)

மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்னுடன்
அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம்

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ
நேச மனாழர் மேல் தூவிடுவோம்

புத்திர பாக்கியம் புகளும் நாள் வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்று இவர் என்றும்
பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம்

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ
நேச மனாழர் மேல் தூவிடுவோம்

கறை திறையற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணியே இப்போ
நேசமணாளன் மேல் தூவிடுவோம்

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ
நேச மனாழர் மேல் தூவிடுவோம் (2)

Friday, June 20, 2008

உன்னதமானவரின் உயர் மறைவினில் இருக்கிறவன்



================================================

உன்னதமானவரின் உயர் மறைவினில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே (2)

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தாம் சிறகுகளால் மூடுவார் (2)

தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணும் அவர்
அவர் சத்திய பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே (2)

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தாம் சிறகுகளால் மூடுவார் (2)

இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் (2)

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தாம் சிறகுகளால் மூடுவார் (2)

ஆபத்திலும் அவரை நான் நோக்கி கூப்பிடும் வேளையிலும்
என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் (2)

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தாம் சிறகுகளால் மூடுவார் (2)

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்



================================================

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு
தேடுங்கள் கிடைக்கும் என்றார்...( 2 )


பெத்தலகேம் நகரில் மாட்டுதொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா....
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா....( 2 ) (கேளுங்கள்.......)


ஆறு வயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
ஆகமங்கள் ஐம்பத்தாரையும் ஐயம் தீர உணர்ந்தார்.
இயற்க்கை உலகமே தூய்மையானது என
இயேசு நினைத்தாரே....
எல்ல உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே..( 2 ) (கேளுங்கள்...)


ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே ( 2 )
பணிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
இயேசு கேள்வியில் ஆலயகுருக்கள் ஆனந்தமானாரே....
இளமையில் செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே...( 2 )
இளமைபருவத்தில் எளிய வாழ்கையில் இருப்பிடமானாரே......
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -( கேளுங்கள்..(2))


தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே.... ( 2 )
நிலங்களை உழுவதுபோல் உள்ளத்தை உளுங்கள் என்று
உலக பிதா சொன்ன போது உழவர்கள், தொழிலாள
ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர்
இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர்.....

அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டுயென்றார்
இயேசு ஆண்டவன் தொண்டுயென்றார்..
முப்பதாம் வயதில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
ஞானஸ்தானமும் பெற்றாரே......

துன்பத்தை அகற் இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே ( 2 )
இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக்கொடுத்தனே
முப்பது காசுக்காகவே காட்டிக்கொடுத்தனே
ஜனகரீம் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே
தெய்வநிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே ( 2 )
சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே (கேளுங்கள்.......)