Saturday, February 14, 2009

அய்யய்யா நான் ஒரு மாப்பாவி




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


அய்யய்யா நான் ஒரு மாப்பாவி -எனை
ஆண்டு நடத்துமே தேவா நீர் -[2]

அய்யய்யா இது தருணமையா எந்தன்
மீதில் இறங்க சமயமைய்யா

அய்யய்யா இப்போதென் மேலே இறங்குவதும்
அவசியம் வாரவேணும் தேவா நீர் -[2] (அய்ய)

பாதாள லோகத்தின் வாழ்வை எல்லாம் -தினம்
அருவருத்து நான் தள்ளுதற்க்கு

மாசனுகா சுத்த மனம் தருவீர் நீரே
வல்லவராகிய தேவா நீர் -[2] (அய்ய)

பக்தியின் பாதையை விலகாமல் -கெட்ட
பாவத்தில் ஆசைகள் வைய்யாமல்

சத்திய வேதப் படி நடக்க என்னை
தாங்கி நடத்திடும் தேவா நீர் -[2] (அய்ய)

No comments: