Saturday, October 17, 2009

உம்மை நான் நேசிக்கின்றேன் இறைவா இறைவா




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



இறைவா.....இறைவா....இறைவா....இறைவா......இறைவா....
ஆ....ஆ...ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ....ஆ.....ஆ.....ஆ...ஆ......
உம்மை நான் நேசிக்கின்றேன் இறைவா இறைவா.....
உமதன்பு படைப்புகளை நேசிக்கின்றேன் இறைவா..
உம கரத்தின் வல்லமை உணர்கின்றேன் இறைவா..
உம் முகத்தை படைப்பினில் காணுகின்றேன் இறைவா....
இறைவா...இறைவா...உயிரான இறைவா..உடன் வாழும் இறைவா...(உம்மை நான்.....)

1

வானம் பூமி கடல் யாவும் நேசிக்கின்றேன் இறைவா..
கானம் பாடும் பறவைகளை நேசிக்கின்றேன் இறைவா...
அதிகாலை பனிப்பொழிவை நேசிக்கின்றேன் இறைவா...
அழகு மலர்கள் புல்வெளிகள் நேசிக்கின்றேன் இறைவா....
உன் புகழ் உரைக்கின்றேன் உதயம் ஆகிறாய்..(2)
உன்பதம் பணிகின்றேன் ஒளிவிளக்காகிறாய்......
அழகிய என் உலகை அனைத்து காத்திடவே
அன்பால் நிறைத்திடவே ஆற்றல் தருகின்றாய்....
இறைவா...இறைவா...உயிரான இறைவா..உடன் வாழும் இறைவா...(உம்மை நான்.....)

2

கதிரவனை முழுநிலவை நேசிக்கின்றேன் இறைவா....
தவழும் நதி வீசும் தென்றல் நேசிக்கின்றேன் இறைவா....
நீலவானில் நீந்தும் மேகம் நேசிக்கின்றேன் இறைவா.....
வான்பொழியும் மழைப்பொழிவை நேசிக்கின்றேன் இறைவா....
இயற்கையில் சங்கமித்து உன்னைக் காணுகின்றேன்...(2)
இறை உன் படைப்போடு ஒன்றாய்ப் பாடுவேன்......
எல்லா உயிர்களுமே எங்கும் வாழ்ந்திடனும்.......
எல்லா மாந்தருமே மகிழ்வை கண்டிடணும்.....
இறைவா...இறைவா...உயிரான இறைவா..உடன் வாழும் இறைவா...(உம்மை நான்.....)

No comments: