Tuesday, August 26, 2008

உதவி வரும் கன்மலைநோக்கி Udavi varum kaanmalainokki




உதவி வரும் கன்மலைநோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் [2]

(1)
கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் [2]
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் [2] (உதவி)

(2)
கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார்[2]
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் [2] (உதவி)

(3)
கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் [2]
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் [2] (உதவி)

(4)
போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் [2]
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் [2] (உதவி)

No comments: